நான் உயிர்த்தெழுதல், மற்றும் வாழ்க்கை
நான் உயிர்த்தெழுதல் , ம ற்றும் வாழ்க்கை ( ஜான் 11: 17-26) இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார் . பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது . யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள் . இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது , அவருக்கு எதிர்கொண்டுபோனாள் ; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள் . மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து : ஆண்டவரே , நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் . இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் . இயேசு அவளை நோக்கி : உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார் . அதற்கு மார்த்தாள் : உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் ....